Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு கால் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நேற்று மோதின. டாசில் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் யு-19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் சமி அஸ்லம் 95 ரன், இமாம் உல் ஹக் 82 ரன் விளாசினர். கம்ரான் குலாம் 52 ரன், ஹசன் ரஸா 12, ஜாபர் கோஹர் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். சவுத் ஷகீல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 50 ஓவரில் 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 42.3 ஓவரில் 158 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சமரவிக்ரமா 51, பிரியமால் பெரேரா 68, ராமநாயகே 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் யு-19 பந்துவீச்சில் ஜியா உல் ஹக், கராமத் அலி, ஜாபர் கோஹர், கம்ரான் குலாம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பாக். கேப்டன் சலிம் அஸ்லம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

0 comments:

Post a Comment