Breaking News
Loading...
Sunday 20 April 2014

Info Post
தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பாவின் ரோமானிய டுல்கியா நகரை சேர்ந்த பெண் லுமினியா பெரிஜோக்(வயது 31).
ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் ஆண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இவரது பார்வையில் டாக்சி டிரைவரான நிக்கோலே ஸ்டான் என்பவர் அகப்பட்டார்.
நிக்கோலேவுடன் உல்லாசம் அனுபவிக்க நினைத்த லுமினியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் ஏமாற்றம் அடைந்த லுமினியா, டாக்சி டிரைவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார்.
உடலின் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த நிக்கோலே, இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, தன்னை நிக்கோலே கற்பழிக்க முயன்றதாகவும், தப்பிக்கும் எண்ணத்திலேயே கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதிகப்படியான மருந்துகளை சாப்பிட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இந்த தவறு நடந்து விட்டது என்று கூறி, லுமினியா மருத்துவ ஆவணங்களை சமர்பித்ததன் பேரில் நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment