Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனம் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி ஃபிளவரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை, பிசிசிஐ செயலாளர் சஞ்சய் படேல் மறுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து நியூஸிலாந்து சுற்றுப் பயணத்திலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் அணியின் பயிற்சியாளர் ஃபிளட்சர் நீக்கப்பட இருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
இந்த தகவலை பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த செய்தியே தவறானது. பிசிசிஐ செயலர் நான்தான். நான் ஃபிளவருடன் பேசவில்லை. பிசிசிஐயின் எந்த அதிகாரி தங்களுக்கு அந்த தகவலைத் தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பத்திரிகை தெரிவிக்க வேண்டும்' என்றார்.
நியூஸிலாந்து தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி முடிந்த பின் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஃபிளட்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் படேல் தெரிவித்தார்

0 comments:

Post a Comment