வெளிநாடுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணியின் கேப்டன் தோணியிடமும், அதன் பயிற்சியாளர் பிளட்சரிடமும் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்ப கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
தென்னாப்ரிக்கா, நியுசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்திய அணி, அனைத்திலும் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
மிக மோசமான தோல்விகளை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களின் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து ஆராய தோணி மற்றும் பிளட்சர் ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment