இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இருவருக்கும இடையே காதல் முறிந்துள்ளதாக கோடம்பபாக்கத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சிம்பு நயன்தாரா என் தோழி, ஹன்சிகா என் காதலி என்றும், நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா எதிர்க்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சிம்பு தனது டுவிட்டரில் யாருடனும் எனக்கு உறவு இல்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.. இதன் மூலம் காதல் முறிந்தது உண்மைதான் என பேசப்படுகிறது.
இந்நிலையில் சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்ட போது நான் அது பற்றி பேச விரும்பவில்லை என்றும நேரம் வரும் போது நிச்சயம் இதுபற்றி பேசுவேன் என்றும் கூறினார். மேலும் ரசிகர்கள் எனது திருமணம் பற்றி பேசுகிறார்கள்.
15 வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை. ஆனால் அது நடந்தது அதுபோல் எனக்கு திருமணம் சரியான நேரத்தில் நடக்கும். நானும் எனது தாயும் எப்போது என்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்போது திருமணம் செய்து கொள்வேன். என்னிடம் தற்போது 10 படங்கள் கைவசம் உள்ளன. என் படங்களுக்கு நானே போட்டியாக இருக்கிறேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment