Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
துபாய்: இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் (19 வயதுக்குட்பட்டோர்) கால் இறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் யு19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் துபாய், அபுதாபி, ஷார்ஜா மைதானங்களில் நடைபெற்று வருகிறது (பிப். 14 - மார்ச் 1). ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது-. 222 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் இந்திய ஜூனியர் யு19 உலககோப்பை கனவு தகர்ந்தது.

0 comments:

Post a Comment