சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், திரையுலக முன்னோடிகள்
பி.ஆர்.பந்துலு, பி.சுப்பிரமணியம் பிள்ளை, எல்.வி.பிரசாத், டி.ராமானுஜம்,
டி.வி.எஸ்.ராஜு, பி.நாகிரெட்டி, கே.சுப்பிரமணியம் ஆகியோருக்கு சென்னை
அண்ணாசாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளை நேற்று பிற்பகல் 1.30 மணியளவில், தலைமை செயலகத்தில் இருந்து
தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இதில் முன்னோடிகளின் வாரிசுகள் கலந்துகொண்டனர். மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் முன்னோடிகளின் வாரிசுகள் கலந்துகொண்டனர். மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment