Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் தான் சிறந்தது என்று டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் புகைப்பட கண்காட்சியை ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 1914ம் ஆண்டு பாம்பன் பாலம் உருவாக்கப்பட்டது முதல் தற்போது உள்ள நிலை வரையிலான புகைப்படங்கள் இருந்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதரன், மோனோ ரயில் என்பது வேகமான பயணத்திற்கு மட்டுமே உதவும் என்றார். சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மோனோ ரயிலை காட்டிலும் மெட்ரோ ரயில் தான் சிறந்தது என்றும் அவர் கூறினார்.

நூறாண்டு கடந்த பாம்பன் பாலத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ஸ்ரீதரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் பாம்பன் பாலம் பழுதடைந்த போது தான், அதன் சீராய்வுக் குழுவில் ஸ்ரீதரன் பொறியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment