பெரம்பூர் : கொடுங்கையூரில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வாங்க
டோக்கன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று 2 வது நாளாக மறியல்
செய்தனர்.சென்னை மாநகராட்சி 41வது வார்டு எழில்நகர், அன்னை சத்யாநகர்,
எம்ஜிஆர் நகர், சந்திரசேகரர் நகர் உள்ளிட்ட பகுதியில் தமிழக அரசின் இலவச
மிக்சி, கிரைண்டர், மின் வ¤சிறிக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன்
கிடைக்காத மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனர். அப்போது
விடுபட்டவர்களுக்கு 24ம் தேதி டோக்கன் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றும் டோக்கன் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் நேற்று மறியல் செய்தனர். போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.சென்னையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு டோக்கன் கிடைக்கப்பெறாதவர்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் நேற்று மறியல் செய்தனர். போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.சென்னையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு டோக்கன் கிடைக்கப்பெறாதவர்கள்
0 comments:
Post a Comment