மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டித்திடல் இடைத்தங்கல் முகாமில்
13வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூதூர்
பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் இடம்பெற்றதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
பட்டித்திடல் இடைத்தங்கல் முகாமில் வசித்துவரும் சிவஜோதி டிலானி (வயது 13) என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த மாணவியின் சடலம் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment