Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post
கொழும்பு,
இலங்கையின் வட மத்திய மாகாணத்தில உள்ள படாவியா பகுதியில் கடந்த 11–ந்தேதி ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகள் 3 பேரை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றது.
இவர்கள் மூவரையும் ஐரோப்பாவில் தலைமறைவாக வசிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களான நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோர் பின்னணியில் இருந்து இயக்கியதாக இலங்கை அரசு கருதுகிறது. இது தொடர்பாக அவர்கள் இருவரையும் தேடிப்பிடிப்பதற்காக சர்வதேச போலீசின்(இன்டர்போல்) உதவியையும் இலங்கை அரசு நாடியுள்ளது.
இது குறித்து இலங்கை போலீசின் செய்தி தொடர்பாளர் அஜித் ரொகானா கூறுகையில், ‘கடந்த வாரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோபி, அப்பன், தெவியான் மூவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இவர்களை நெடியவனும், விநாயகமும்தான் பின்னணியில் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் தற்போது வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனவே இவர்களை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவவேண்டும்’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment