சியோல்,
476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழந்து மூழ்கி வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் பயணம் செய்தவர்களில் பள்ளி மாணவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றுள்ளனர்
தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மொக்போ சிட்டி கடலோர காவல்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் கார்களும், டிராக்டர்களும் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் 900 மக்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்தது. கப்பல் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மிட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
0 comments:
Post a Comment