Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post

பீஜிங்,
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 4 கால்கள் மற்றும் கைகளுடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடலில் இருந்த கூடுதல் கால்கள் மற்றும் கைகளை சீனா டாக்டர்கள் நீக்கியுள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  குழந்தை குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2ம் தேதி பிறந்துள்ளது. கூடுதல் கால்கள் மற்றும் கைகள் குழந்தையின் உடல்பகுதியில் இருந்துள்ளது என்று மாகாண பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையம் தெரிவித்துள்ளது.
குழந்தை பிறந்த போது 3 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நிமோனியா மற்றும் இதய நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை கூறுகையில் எனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது 5 பரிசோதனை மையம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று பரிசீலனை செய்தார். ஆனால் எந்த ஒரு டாக்டரும் குழந்தை இயற்கைக்கு மாறாக உள்ளது என்று தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தன்னைத்தானே அவர் குறை கூறியுள்ளார். நான் எனது பணியில் மட்டுமே அக்கறையாக இருந்தேன். மருத்துவபரிசோதனை குறித்து மனைவியுடன் பேசுவதற்கு பதில் நான் பணம் சம்பாதிப்பதையே எண்ணிக் கொண்டு இருந்தேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment