Breaking News
Loading...
Friday 25 April 2014

Info Post
தானே,
மராட்டிய மாநிலம் தானேவில் விபச்சாரத்திற்கு மறுத்த 23 வயது இளம் பெண்ணை மூன்று வாலிபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தானேயின் பிவாண்டி அருகே உள்ள அனுமான் தெக்டி என்ற இடத்தில் நடந்துள்ளது. இளம் பெண் குஜராத்தில் இருந்து விபச்சாரத்திற்காக பிவாண்டி கொண்டுவரப்பட்டுள்ளார். இந்நிலையில் இளம் பெண் விபச்சாரத்திற்கு மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர்கள் பெண்ணை இரும்பு தடியை கொண்டு அடித்து- உதைத்து கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் இளம்பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment