Breaking News
Loading...
Friday 25 April 2014

Info Post
மும்பை,
மாடல் அழகியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்தி நடிகர் இந்தர் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மனைவி தகராறு
வாண்டட், மா துஜ்ஹி சலாம், பாக்ஹி, மசூம் உள்ளிட்ட இந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இந்தர் குமார். இவர் மும்பை அந்தேரி, வெர்சோவா பகுதியில் உள்ள சாந்திநிகேதன் பங்களாவில் வசித்து வருகிறார்.  
இந்தர் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி பல்லவி நேற்று மாலையில் அவரை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் சமரசம்
தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பல்லவி, வெர்சோவா போலீஸ் நிலையம் சென்று கணவர் மீது புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இந்தர் குமாரும் போலீஸ் நிலையம் வந்தார். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர்.  தம்பதியர் இடையேயான தகராறுக்கு 23 வயது மாடல் அழகி ஒருவர் காரணம் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்தர் குமார்-பல்லவி இடையே போலீசார் சமரச முயற்சி மேற்கொண்டனர். இதில் சமரசம் அடைந்த தம்பதியர் வீடு திரும்பினார்கள்.
மாடல் அழகி புகார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட மாடல் அழகியை நடிகர் இந்தர் குமார் தனது வீட்டுக்கு அழைத்தார். அதன்படி மாடல் அழகியும் அங்கு வந்தார். அங்கு அவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடிகர் இந்தர் குமார், மாடல் அழகியை பீர் பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் இந்தர் குமார் மீது மாடல் அழகி போலீசில் புகார் செய்தார். இந்திப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாகவும், பின்னர் நடந்த சம்பவத்தில் பீர் பாட்டிலால் தன்னை தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் நடிகர் இந்தர் குமாரை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment