ஐபிஎல் 7வது சீசன் தொடக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாக அமைந்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 205 ஓட்டங்கள் எடுத்தும், பரிதாபமாக தோற்றது.
இப்போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை, ‘கேட்ச்’ செய்ய முயன்ற ஆல்–ரவுண்டர் பிராவோ ‘டைவ்’ அடித்தார். அப்போது இடது தோளில் காயம் அடைந்தார்.
உடனடியாக களத்தில் இருந்து வெளியேறிய இவர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுவரையிலும் காயத்தின் தன்மை குறித்து முழுமையாக தெரியவரவில்லை, இது சென்னை அணிக்கு பெரும் பின்னடையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தொடரில் அதிக விக்கெட்(32) வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெற்ற இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக பவுலிங் செய்யாததும், சென்னை அணிக்கு பலவீனம் ஆனது.
0 comments:
Post a Comment