சர்வதேச டுவென்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக்குழு தலைவருக்கு, குமார் சங்கக்காரா தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த சர்வதேச டுவென்டி-20 போட்டிகளுக்கு அணி ஒன்றை தயார்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஓய்வை அறிவிக்க சரியான தருணம் இது என சங்கக்காரா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த மாதங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கூடிய கவனம் செலுத்த தனக்கு வாய்ப்பளிக்கும்படி குமார் சங்கக்காரா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment